பகலுக்காக காத்திருக்கும் பூவல்ல நாங்கள்,
இரவிற்காக விழித்திருக்கும் கூகை அல்ல நாங்கள்,
நீருக்காக நின்றிருக்கும் நெற்கள் அல்ல நாங்கள்,
போருக்காக பயந்திருக்கும் கோழையல்ல நாங்கள்,
மழையோடு மறந்து போகும் குடையும் அல்ல நாங்கள்,
வெயிலோடு கூட வரும் வியர்வை அல்ல நாங்கள்,
தினம் ஒவ்வொன்றாய் பொருக்கி தின்னும் குருவி அல்ல நாங்கள்,
விழித்திருக்கும் பொழுதுகளில் தூக்கமின்மை பேசுவோம்,
தூங்க வேண்டிய பொழுதுகளில் விழித்திருந்து பேசுவோம்,
வெட்டிக்கதை பேசியே தப்புதப்பாய் "CODE" செய்யவோம்,
திருந்தாத உலகமென மெய்ய்யுலகை பொய் என்போம்,
பொய் உலகில் வாழ்ந்து கொண்டே மெய் பறந்து ஆடிடுவோம்..!!
- உலகில் எதுவுமே நிலையில்லை, நாளைக்கே மார்க்கெட் சரிந்து நாமெல்லாம் தெருவோரம் நடக்கலாம், நிஜ வாழ்வின் இன்ப துன்பங்களை நேரினில் சந்தித்து உரையாடலாம்..!!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home